நேசிக்குமா நெஞ்சம்
இதோ இக்கடிதத்தை திறக்க போகிறேன். திறந்தாள் இன்று இரண்டில் ஒன்று தெரிந்து விடும். என்று தன்னை நாடி வந்த கடிதத்தை பிரித்து படித்தால் ரியா... என்னை மன்னித்து விடு ரியா, எனக்கு பணம் அவசரமாக தேவை பட்டது, அந்த அளவு பெரிய தொகையை யாரிடம் கேட்பதுதென்றும் தெரியவில்லை, அதனால் தான் வந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு நான் டெல்லிக்கு புறப்பட்டு விட்டேன்... என்னை எனக்கே தெரிய படுத்தியவள் நீ, உன்னை நன்றாக கவனித்து கொள்ளவும், நமக்கு தேவையானதை பிற்காலத்தில் பூர்த்தி செய்யவும், இப்பொழுது இருக்கும் கடனை அடைக்கவும் வேறு வழியில்லாமல் வந்து விட்டேன். உன்னிடம் இருந்து கடிதம் நிச்சயம் வரும் என்று நம்பியிருந்தேன் ஆனால் வரவே இல்லை. என் மீது அவ்வளவு கோபமா, மன்னித்து விடு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிச்சயம் உன்னை வந்து சேருவேன்... எனக்காக காத்திருப்பாயா..., உனக்காகவும் உன் பதிலுக்காகவும் காத்திருக்கிறேன்... என்னை நேசிக்கும் நீ, என் நேசத்தையும் காட்ட இரண்டு வருடம் கடன் கொடு... காத்திருப்பாய் என்ற நம்பிக்கையில் உன் ...